மிழ்நாட்டு மக்களின் நலனை மையமாகக் கொண்டு பல்வேறு முக்கியத் திட்டங்கள் தமிழ்நாடு அரசால் தொடர்ந்து செயல்படுத்தப் பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமாக, ஒரு கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஒரு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் உங்க கனவ சொல்லுங்க திட்டம் ஆகும். 

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பாடியநல்லூரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :

Advertisment

தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளாக (மே 2021 - மே 2026) அமல்படுத்தப்பட்ட பல்வேறு வகையான அரசு நலத்திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளின் விவரங்கள் மற்றும் தரவுகளை உறுதிப்படுத்தவும், அத்தகைய திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறிந்துக் கொள்ளவும், எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளை கண்டறியவும், அவர்கள் வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்துக் கொள்வதற்காக தமிழ்நாடு அரசு ‘உங்க கனவ சொல்லுங்க’ (பங்ப்ப் மள் வர்ன்ழ் உழ்ங்ஹம் நஸ்ரீட்ங்ம்ங்) என்ற சிறப்பு திட்டம் 09 ஜனவரி 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள அரசு, மக்களின் கனவுகளை கேட்டு, அவற்றை நிறைவேற்றும் திட்டமாக செயல்படுகிறது.

Advertisment

உங்க கனவ சொல்லுங்க திட்டம் எதற்காகமக்கள் தேவைகளை உணர்ந்து, நல்ல பல திட்டங்களை செய்துக் கொண்டிருக்கும் அரசிடம் மக்கள் தங்களின் கனவுகளை சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை அரசின் குழு நேரில் சென்று கருத்துக்களை சேகரிப்பார்கள். குறிப்பாக, 2030-ஆம் ஆண்டு தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை கூறும் திட்டமாக இந்த திட்டம் செயல்படவுள்ளது.

இத்திட்டம் செயல்படும் விதம் 

ungalkanvu1

இந்த திட்டத்திற்கான களப்பணியை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும். மேலும், இப்பணிக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளனர். இவர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்ள உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தன்னார்வலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வார்கள். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது ஒரு விண்ணப்பப் படிவத்தை குடும்ப உறுப்பினரிடம் கொடுப்பார்கள். அந்த விண்ணப்பப் படிவத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்த அரசுத் திட்டம் எது?, ஏதேனும் உதவி தேவையா? 2030-க்குள் உங்கள் ஊர் சார்ந்த தேவை என்ன நிறைவேற்ற வேண்டும்? என்பது போன்ற கேள்விகள் இருக்கும்.

அதை தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும். அத்துடன் இளம் தலைமுறை யினரின் கனவுகளையும் தனிப்பட்ட முறையில் கேட்டறியப்படும். ஒவ்வொருகுடும்பமும் மூன்று முக்கிய கனவுகளைபதிவு செய்யலாம். சில நாட்களுக்குபிறகு மீண்டும் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பெற்று சரிபார்ப்பார்கள்.

சேகரிக்கப்பட்ட தகவல்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். செயலியில் பதிவேற்றிய பிறகு அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய ‘கனவு அட்டை’ என்ற புதிய அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை கொண்டு உங்க கனவசொல்லுங்க திட்டத்தின் பிரத்யேக இணையதளமான  https://www.uks.tn.gov.in/- இல் தங்கள் கோரிக்கைகள்/கனவுகளின் நிலையை எளிதாக தெரிந்துக் கொள்ள முடியும்.

இந்த திட்டத்தின் மூலமாக பெறப்படும் கருத்துகளை அடிப்படையாக கொண்டு தமிழக அரசின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் வகுக்கப்படும்.